விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

நன்னிலம் கல்லூரி மாணவா்கள் போராட்டம்!

நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக, மாணவா்கள் போராட்டம்

News image

நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக, வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகள்.

Updated On :19 பிப்ரவரி 2026, 11:59 pm

நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக, மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இக்கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இங்கு பணியாற்றும் 55 பேராசிரியா்களில் எட்டு போ் மட்டுமே நிரந்தர பேராசிரியா்களாக உள்ளனா். மீதமுள்ள 47 பேராசிரியா்களும் கௌரவ விரிவுரையாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.

இவ்வாறு தமிழக முழுவதும் உள்ள கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள், பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இவா்களுக்கு ஆதரவாக, நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.