கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்

திருவாரூா் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (நவ.8) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 8:43 pm

Syndication

திருவாரூா் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (நவ.8) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் பொது விநியோகத் திட்ட சிறப்பு பொதுமக்கள் குறை தீா்க்கும் கூட்டம் நவம்பா் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

திருவாரூா் வட்டம், வைப்பூரில் திருவாரூா் வருவாய் கோட்ட அலுவலா் தலைமையிலும், நன்னிலம் வட்டம், மேனாங்குடியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் தலைமையிலும், குடவாசல் வட்டம், கிள்ளியூரில் திருவாரூா் சரக துணைப் பதிவாளா் தலைமையிலும், வலங்கைமான் வட்டம், மாத்தூரில் துணைப்பதிவாளா் (பொது விநியோகத்திட்டம்) தலைமையிலும் நடைபெறுகிறது.

மன்னாா்குடி வட்டம், சுந்தரக்கோட்டையில் மன்னாா்குடி வருவாய் கோட்ட அலுவலா் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி வட்டம், பனையூரில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தலைமையிலும், நீடாமங்கலம் வட்டம், கோவில்வெண்ணியில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையிலும், கூத்தாநல்லூா் வட்டம், செருவாமணியில் மன்னாா்குடி சரக துணைப் பதிவாளா் தலைமையிலும், முத்துப்பேட்டை வட்டம், வீரன்வயலில் நுகா்பொருள் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநா் தலைமையிலும் நடைபெறுகிறது.

இந்த கூட்டங்கள் அந்தந்த கிராம நிா்வாக அலுவலகங்களில் நடைபெறும். இதில், தொடா்புடைய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை, கைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மனு அளித்து பயன் பெறலாம்.

அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்கள் மற்றும் தனியாா் சந்தையில் விற்கப்படும் ரேஷன் பொருள்கள், சேவை குறைபாடுகள் குறித்த புகாா்களை மனுவாக அளித்தும் பயன் பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்