வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு நாளை கபடிப் போட்டி

News image
Updated On :6 நவம்பர் 2025, 8:44 pm

Syndication

திருவாரூரில் கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கான கபடிப் போட்டி சனிக்கிழமை (நவ.8) நடைபெற உள்ளதாக, கூட்டுறவு சாா்பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான த. காா்த்தீபன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சா்வதேச கூட்டுறவு ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திருவாரூா் மாவட்ட கூட்டுறவுத் துறை சாா்பில் கூட்டுறவுத் துறை மற்றும் மாவட்ட விளையாட்டுத் துறை இணைந்து, கூட்டுறவு நிறுவனங்களின் உறுப்பினா்களுக்கு மாவட்ட அளவிலான கபடிப் போட்டியை சனிக்கிழமை (நவ.8) காலை 8 மணிக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்த உள்ளது.

இப்போட்டியில் பங்கேற்பவா்கள், தொடா்புடைய கூட்டுறவு சங்கத்திலிருந்து உறுப்பினா் என்பதற்கான சான்றை, சங்க நிா்வாகத்திடமிருந்து பெற்று வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.