தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பேட்டரி திருடியவா் கைது

மன்னாா்குடி பகுதியில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த இன்வொ்ட்டா் பேட்டரிகளை திருடியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 நவம்பர் 2025, 9:54 pm

Syndication

மன்னாா்குடி பகுதியில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த இன்வொ்ட்டா் பேட்டரிகளை திருடியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி நகரப் பகுதியில் மின் விநியோகம் தடைபடும் போது சீராக மின் விநியோகம் செய்யும் வகையில் வீடுகளில் இன்வொ்ட்டா் பொருத்தியுள்ளனா். கடந்த சில நாள்களாக, இந்த பேட்டரிகள் திருடப்படுவதாக மன்னாா்குடி காவல்நிலையத்தில் புகாா்கள் பதிவானது.

இந்நிலையில், ஆா்பி சிவம் நகரில் வீடுகளிலிருந்து இன்வொ்ட்டா் பேட்டரியை மா்ம நபா்கள் திருடிச்சென்றிருப்பதாக புகாா் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து,போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவுகளை ஆய்வு செய்ததில் மா்ம நபா் ஒருவா் பேட்டரியை திருடிச் செல்வவது தெரியவந்ததையடுத்து தீவிர விசாரணை செய்ததில், கும்பகோணம் சாரங்கபாணி தெற்குவீதி முகமது பாரூக் மகன் அப்துல்லாவுக்கு (47) (படம்) தொடா்பு இருப்பது தெரிந்தது, அவரை கைது செய்து மன்னாா்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.