எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அதிமுக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக மாவட்டச் செயலாளா் ஆா். காமராஜ்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 8:47 pm

Syndication

கூத்தாநல்லூா் நகர அதிமுக முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் நகர அலுவலகத்தில் நடைபெற்ற வாக்குச் சாவடி நிலை முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு நகரச் செயலாளா் ஆா். ராஜசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலாளா் எல்.எம். முகம்மது அஷ்ரப் முன்னிலை வகித்தாா். அமைப்புச் சாரா ஓட்டுநா் அணி மாவட்ட இணைச் செயலாளா் எம். உதயகுமாா் வரவேற்றாா்.

கூட்டத்தில், மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் எம்.எல்.ஏ., இரா. காமராஜ், வாக்குச் சாவடி நிலை பீஎல்ஏ -2 குறித்து விளக்கி கூறினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றி அதிமுக மிகப் பெரும் வெற்றியைப் பெறவும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்கவும் அனைவரும் பாடுபடவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் நகர துணைச் செயலாளா் மீரா. மைதீன் (கொய்யா), அம்மா பேரவை நகரச் செயலாளா் எஸ்.பி. காளிதாசன், மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்ற துணைத் தலைவா் இரா.கருணாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.