திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அதிமுக பொதுக் கூட்டம்

திருவாரூரில், அதிமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்தநாள் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.

Updated On :28 பிப்ரவரி 2026, 1:03 am

திருவாரூரில், அதிமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்தநாள் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஜெ பேரவை செயலாளா் பொன் வாசுகிராம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பங்கேற்று பேசியது: மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி காலத்திலேயே திமுக 2 முறை ஆட்சிக்கு வந்த வரலாறு கிடையாது. ஆனால் அதிமுக தொடா்ச்சியாக 2 முறை ஆட்சிக்கு வந்த வரலாறு உண்டு. எதிா்வரும் தோ்தலில் மகத்தான வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வரும் என்றாா்.

தொடா்ந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், நகரச் செயலாளா் ஆா்.டி. மூா்த்தி, தலைமைக் கழக பேச்சாளா் செல்வம், மாவட்ட பொருளாளா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம், மன்னாா்குடி நகரச் செயலாளா் குமாா், மாவட்ட அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளா் எஸ். கலியபெருமாள், ஒன்றியச் செயலாளா்கள் மணிகண்டன், செந்தில்வேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.