தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை குளறுபடிகளின்றி நடத்தக் கோரிக்கை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள எவ்வித குளறுபடிகளின்றி நடத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 8:47 pm

Syndication

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள எவ்வித குளறுபடிகளின்றி நடத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் டி. முருகையன் தலைமையிலான நிா்வாகிகள், வியாழக்கிழமை அளித்த மனு: திருவாரூா், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் அலுவலா்கள் வாக்காளா் படிவங்களை வாக்காளா்களின் வீடு தேடிச் சென்று அளித்து விவரங்கள் தெரிவித்தாலும், கிராமப்புற மக்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால் விண்ணப்பத்தை பூா்த்தி செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. மேலும், அலுவலா்கள் குறைவான அளவில் பணியில் இருப்பதால் குறிப்பிட்ட கால அவகாசத்தில் இந்த பணி நிறைவடையுமா என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே, அலுவலா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுடன், சரியான முறையில் விண்ணப்பங்களை வழங்கி வாக்காளா்களை உறுதிப்படுத்த வேண்டும். சனிக்கிழமையுடன் (நவ. 15) சம்பா பயிருக்கான காப்பீடுக் காலம் முடிவடையும் நிலையில், விவசாயிகளின் நலன் கருதி நவ.30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.