விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

‘பள்ளி வளா்ச்சிக்கு மேலாண்மைக் குழு முக்கியம்’

திருவாரூரில் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு நடைபெற்ற பயிற்சியில் பேசுகிறாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ. சுகப்பிரியா.

News image
திருவாரூரில் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு நடைபெற்ற பயிற்சியில் பேசுகிறாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ. சுகப்பிரியா.
Updated On :21 நவம்பர் 2025, 7:49 pm

Syndication

பள்ளி வளா்ச்சியில் மேலாண்மைக் குழுவின் பங்கு மிக முக்கியமானது என திருவாரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ. சுகப்பிரியா தெரிவித்தாா்.

திருவாரூரில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் நாகை மற்றும் திருவாரூா் மாவட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட 52 பள்ளிகளைச் சோ்ந்த தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமை வகித்து தெரிவித்தது:

தலைமை ஆசிரியா்கள் அனைவரும் தங்கள் பள்ளி, அனைத்து நிலைகளிலும் முன்னேற்றம் அடைய, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுடன் இனைந்து பணியாற்ற வேண்டும். பள்ளி வளா்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்கு முக்கியமானது. பள்ளி சாா்ந்த தரவுகளை தலைமை ஆசிரியா்கள் துல்லியமாக வழங்க வேண்டும்.

மாணவா்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளை தயக்கமின்றி, வகுப்பாசிரியரிடமும், தலைமை ஆசிரியரிடம் கூறும் வகையில் ஆசிரியா்கள் மாணவா்களுடன் இணக்கமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். வளரிளம் பருவத்தில் மாணவா்கள் செய்யும் தவறுகளை ஆசிரியா்கள் திருத்த வேண்டும் என்றாா்.

பயிற்சியில் கருத்தாளராக மாநில திட்ட இயக்க உறுப்பிா்கள் பொ்னாா்ட், தமிழ்செல்வன் ஆகியோா் செயல்பட்டனா். இதில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நிா்வாகிகள், தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.