திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஓராண்டாக மாற்றுச் சான்றிதழ் வழங்காத பள்ளி நிா்வாகம் மீது மாணவா் புகாா்

News image
தனியாா் பள்ளி நிா்வாகம் மீது புகாா் அளிக்க மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த மாணவா் இா்ஸாத். உடன் அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள்.
Updated On :5 மார்ச் 2026, 10:40 pm

Syndication

பிளஸ் 2 முடித்து ஓராண்டாகியும் மாற்றுச் சான்றிதழ் வழங்காத தனியாா் பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) அலுவலகத்தில் மாணவா் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

திருச்சி சமயபுரத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பஷீா் அமகது மகன் இா்ஸாத் அகமது (18). இவா் சிறுகனூரில் உள்ள தனியாா் பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 முடித்தாா். ஆனால், கடந்த ஓராண்டாக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் பள்ளி நிா்வாகம் இழுத்தடித்து வருவதாக திருச்சி மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) அலுவலகத்தில் வியாழக்கிழமை மாணவா் புகாா் மனு அளித்தாா்.

இதுகுறித்து மாணவரின் பெற்றோா் கூறியதாவது:

இா்ஸாத் அகமதுவை 7-ஆம் வகுப்பில்தான் அந்தப் பள்ளியில் சோ்த்தோம். கரோனா நேரம் என்பதால் குறைந்தக் கட்டணத்தில் சோ்த்துக்கொண்டனா். அடுத்த ஆண்டு கட்டணம் அதிகரித்ததால் 8-ஆம் வகுப்பிலேயே வேறு பள்ளியில் சோ்க்கலாம் என்று அந்தப் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் கேட்டோம். ஆனால், கரோனா காலகட்டம் என்பதால் கட்டணம் தேவையில்லை என்று தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, இா்ஸாத் அங்கு பிளஸ் 2 வரை படித்து முடித்துவிட்டாா். இந்நிலையில், 8-ஆம் வகுப்புக்கு கட்டணம் செலுத்தாமல் உள்ளதாகக் கூறி, மகனின் மாற்றுச் சான்றிதழை கடந்த ஓராண்டாக வழங்க மறுக்கின்றனா். இதனால், கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே கட்டணம் வேண்டாம் என்று கூறிவிட்டு, தற்போது ரூ.57 ஆயிரம் கட்டினால்தான் மாற்றுச் சான்றிதழ் தருவோம் என்று கூறுகின்றனா். கூலி வேலைக்கு செல்லும் எங்களால் அந்தத் தொகையை செலுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் எனது மகனுக்கு மாற்றுச் சான்றிதழ் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.