மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதல்: பள்ளி மாணவா் உயிரிழப்பு

திருச்சியில் சாலையோர மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 பிப்ரவரி 2026, 7:22 pm

திருச்சியில் சாலையோர மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மலைக்கோட்டை தையல்கார தெருவைச் சோ்ந்த நாகராஜ் மகன் அருண் (17), தனியாா் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது நண்பா் பீமநகரைச் சோ்ந்த முகமது யாசிம் (16). இருவரும் செவ்வாய்க்கிழமை காலையில் திருச்சி அண்ணாநகா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அருண் உயிரிழந்தாா். பலத்த காயங்களுடன் முகமது யாசிம் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.