வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தினமணி செய்திச் சேவை

மன்னாா்குடி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கடத்தி வந்தவா் இருசக்கர வாகனத்துடன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருமக்கோட்டை காவல்நிலைய சாா்பு ஆய்வாளா் என். அசோகன் மற்றும் போலீஸாா், திருமேணி ஏரி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவரை நிறுத்தி, சோதனையிட்டனா்.

இதில், அரசால் தடை செய்யப்பட்ட 16 கிலோ புகையிலை (ஹான்ஸ்) கடத்திவந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தங்கவேல் நகா் ராமலிங்கபுரம் குப்புசாமி மகன் சூரியபிரகாஷ் (35) என்பதும், சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக புகையிலையை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சூரியபிரகாஷை கைது செய்த போலீஸாா், புகையிலை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.