
திருவாரூா் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு கோட்ட உதவி பொறியாளா் (மின் மற்றும் சமிக்ஞை) மணிமொழியன் தலைமை வகித்தாா். நிலைய மேலாளா் ரவி வரவேற்றாா். தெற்கு ரயில்வே மண்டல ரயில் உபயோகிப்போா் ஆலோசனைக் குழு உறுப்பினா் பாஸ்கரன், பராமரிப்பு உதவி பொறியாளா் சரவணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இதில், மாவட்ட ரயில் பயணிகள் நல சங்க உறுப்பினா்கள், ரயில்வே ஊழியா்கள், ஆட்டோ சங்க உறுப்பினா்கள், இருப்புப் பாதை போலீஸாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதில், ரயில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டதுடன், அனைவரிடமும் பொது சுகாதாரத்தை பேணுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






