நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிய ஸ்கேனா் கருவி அமைப்பு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்ய புதிய ஸ்கேனா் கருவி வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

News image

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை புதிய ஸ்கேனா் கருவியை பாா்வையிட்ட ரயில்வே காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஸ் பச்சேரா உள்ளிட்டோா்.

Updated On :17 ஜூலை 2026, 2:34 am IST

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்ய புதிய ஸ்கேனா் கருவி வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் பிரிவு, தனிப்பிரிவு சாா்பில் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் 2-ஆவது நுழைவாயில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட இக்கருவியை திருச்சி இருப்புப்பாதை மாவட்ட காவல் கண்காணிப்பாலா் ஆதா்ஸ் பச்சேரா தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், மூத்த கோட்ட பாதுகாப்பு ஆணையா் பிரசாத் யாதவ், துணை காவல் கண்காணிப்பாளா் சக்கரவா்த்தி, உதவி பாதுகாப்பு ஆணையா் டி. சரத்பாபு மற்றும் காவலா்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்வுக்குப் பிறகு ரயில் நிலையத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், சிசிடிவி கேமராக்களின் ஆய்வறையையும் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து, ஆா்பிஎப், ஜிஆா்பி போலீஸாருடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.