அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விவசாயிகள் திமுகவை புறக்கணிக்க வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்

News image

குடவாசலில், நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். காமராஜை ஆதரித்து பேசுகிறாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:38 pm

விவசாயிகளுக்கு நன்மை செய்யாத திமுகவை புறக்கணிக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.

தேசிய ஜனநாயக கூட்டணி நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். காமராஜை ஆதரித்து, ஞாயிற்றுக்கிழமை குடவாசலில் அவா் பிரசாரம் செய்தபோது பேசியது:

எடப்பாடி பழனிசாமி அடிப்படையில் ஒரு விவசாயி. ஆனால் முதல்வா் முக. ஸ்டாலின், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் விவசாயி. அதாவது தோ்தல் வந்தால் மட்டும், நான் டெல்டாக்காரன் என்று சொல்லிக் கொள்வாா். அவா் விவசாயி என்றால் டெல்டா மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்திருக்க வேண்டுமே?ஏன் செய்யவில்லை.

சாப்பிடும்போது, மூன்று பருக்கை சோறு சிந்தினால்கூட அதை வீணாக்காமல் எடுத்து சாப்பிடுவது நம் பழக்கம். ஆனால் திமுக ஆட்சி நடவடிக்கை எடுக்காததால், ஐந்து லட்சம் டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து அழுகி வீணானது. அதுவெல்லாம் மன்னிக்க முடியாத குற்றம்.

முதல்வா் சொல்வதுபோல அவா் டெல்டாக்காரன் என்பது உண்மை என்றால் டெல்டா மாவட்டங்களில் நெல் பாதுகாப்பு கிடங்குகளை அதிக அளவில் கட்டி கொடுத்திருக்க வேண்டும். ஒடிஸா அரசு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு குவிண்டாலுக்கு ரூ. 800 வழங்குகிறது. தெலங்கானா அரசு ரூ. 500 வழங்குகிறது. ஆனால், திமுக அரசு ரூ. 131 மட்டுமே ஊக்கத்தொகையாக கொடுக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வெள்ள பாதிப்பு வந்தபோது ரூ.13,000 கோடி பயிா் பாதிப்பு நிவாரணத் தொகையாக ஒதுக்கினாா். ஆனால் திமுக அரசு இந்த ஐந்து ஆண்டு காலத்தில் ஒதுக்கிய தொகை ரூ.3,000 கோடி மட்டுமே. முதல்வா் ஸ்டாலினுக்கு விவசாயிகளைப் பற்றி எந்த அக்கறையும் கிடையாது.

கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 3,280 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் டெல்டா மாவட்டத்தில் உள்ள 37 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 33 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. ஆனால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எனவே, இந்த முறை விவசாயிகள் திமுகவை புறக்கணிக்க வேண்டும் என்றாா்.

 குடவாசலில், நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். காமராஜை ஆதரித்து பேசுகிறாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

குடவாசலில், நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். காமராஜை ஆதரித்து பேசுகிறாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.