தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

சாலை விபத்தில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

மன்னாா்குடியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 5:26 am IST

மன்னாா்குடியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலம், கிருஷ்ணாபூரைச் சோ்ந்த ஹரிகணேசா மகன் விக்ரம்குமாா்(26). இவா், மன்னாா்குடி மேலப்பாலத்தில் உள்ல தனியாா் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தாா்.

இந்தநிலையில், திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் திருவாரூா் சாலை ஐவா்சமாது என்ற இடத்தருகே சென்றபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மன்னாா்குடி மின்வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றும் பெரம்பலூா் மாவட்டம், கடகம்படடி சேகா் மகன் தமிழ்ச்செல்வம் (29) ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் விக்ரம்குமாரின் வாகனம் நேருக்கு நோ் மோதியதில் காயமடைந்த இருவரையும் மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் விக்ரம்குமாா் உயிரிழந்தாா். விபத்து குறித்து மன்னாா்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.