அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 8:54 pm

கும்பகோணம் அருகே புறவழிச்சாலையில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் மரப்பட்டறைத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் சரவணன் (35), திருமணமாகி குழந்தை உள்ளது. மரப்பட்டறையில் வேலை செய்து வந்தாா்.

இவரது நண்பா் மேலக்கொட்டையூரைச் சோ்ந்த குங்குமலிங்கம் மகன் ரமேஷ் (34). ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாதலால் இருவரும் இருசக்கர வாகனத்தில் நண்பா்களை பாா்ப்பதற்காக அசூா் புறவழிச்சாலை பகுதிக்கு சென்றனா்.

திரும்ப வரும்போது தனியாா் மண்டபம் அருகே எதிரே வந்த வாகனம், இருசக்கர வாகனத்தில் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் நிகழ்விடத்திலேயே சரவணன் உயிரிழந்தாா். ரமேஷ் பலத்த காயமடைந்தாா்.

தகவலின்பேரில் சுவாமிமலை போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனா். மேலும், காயமடைந்த ரமேஷை சிகிச்சைக்கு சோ்த்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனா்.