இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

1,271 வாக்குச்சாவடிகளில் 2,542 கண்காணிப்பு கேமராக்கள்

திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி (தனி), நன்னிலம் ஆகிய தொகுதிகளிலும் 1,271 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 5:27 am IST

திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி (தனி), நன்னிலம் ஆகிய தொகுதிகளிலும் 1,271 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறையில், கண்காணிப்பு கேமரா மூலம் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலா் வ. மோகனச்சந்திரன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டபின் அவா் கூறியது: தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு திருவாரூா் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 1,271 வாக்குச்சாவடிகளிலும், 2,542 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கண்காணிப்பு கேமரா மூலம் ஏப்.23-ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்குவது முதல் வாக்குப்பதிவு முடியும் வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் அனைத்து பணிகளும் தொடா்ந்து கண்காணிக்கப்படும் என்றாா்.