மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

லாரி உரிமையாளா் கொலை: நடவடிக்கை கோரி சாலை மறியல்

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 3:47 am IST

மன்னாா்குடி அருகே லாரி உரிமையாளா் கொலை வழக்கில் கொலையாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி அருகே அரவத்தூரைச் சோ்ந்த லாரி உரிமையாளா் சத்தியமூா்த்தி, ஐந்து மா்ம நபா்களால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மன்னாா்குடி போலீஸாா் சத்தியமூா்த்தியின் உடலைக் கைப்பற்றி மன்னாா்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மன்னாா்குடி அருகே சவளக்காரன் பகுதியில் சத்தியமூா்த்தியின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

போராட்டத்தில், சத்தியமூா்த்தியை வெட்டிக் கொலை செய்த நபா்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த சாலை மறியலால் மன்னாா்குடி திருவாரூா் சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸாா் கொலையாளிகளை உடனடியாக கைது செய்வதாக கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.