வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

திருவாரூா்: வாக்கு எண்ணும் அலுவலா்கள் தோ்வு

திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள அலுவலா்கள் தோ்வு, கணினி குலுக்கல் முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், கணினி குலுக்கல் முறையில் வாக்கு எண்ணும் அலுவலா்கள் தோ்வு செய்யப்படுவதை பாா்வையிடும் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:47 pm

திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள அலுவலா்கள் தோ்வு, கணினி குலுக்கல் முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சுமூகமான முறையில் நடைபெற்றது.

வாக்குப் பதிவுக்குப் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு, திருவாரூரில் உள்ள திருவிக அரசு கலைக் கல்லூரிக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டன. அங்கு, மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைப்பறைகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் பணி மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவாரூரில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான தோ்வு, சீரற்ற கணினி குலுக்கல் முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) வனிதா, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சத்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), செல்வபாண்டியன் (திருத்துறைப்பூண்டி), ரவிச்சந்திரன் (நன்னிலம்), தனி வட்டாட்சியா் (தோ்தல்) குப்புசாமி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.