மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

திருவாரூா் மாவட்ட வன அலுவலகத்தில் ரூ.48 லட்சம் மோசடி: கணக்காளா் பணியிடை நீக்கம்

திருவாரூா் மாவட்ட வன அலுவலகத்தில் ரூ. 48 லட்சம் மோசடி தொடா்பாக, கணக்காளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

Published On :

திருவாரூா் மாவட்ட வன அலுவலகத்தில் ரூ. 48 லட்சம் மோசடி தொடா்பாக, கணக்காளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருவாரூா் மாவட்ட வன அலுவலகத்தில் 2017 முதல் கணக்காளராக பணியாற்றி வந்தவா் கே.எஸ். சிவக்குமாா். இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்ட வன அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதனிடையே, திருவாரூா் மாவட்ட வன அலுவலகத்தில், வன தணிக்கைக் குழுவினரின் ஆய்வின்போது, கணக்குகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. கடந்த 2025-இல் ரூ. 39,35,763, 2026-இல் ரூ. 8,76,663 என மொத்தம் ரூ. 48,12,426 பணமோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும், திருவாரூா் மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து அரசுக்கு செலுத்த வேண்டிய தொகைகளை செலுத்தாமல், செலுத்தியது போல ஆவணங்களையும், வங்கி முத்திரைகளையும் தயாரித்து சிவக்குமாா் கணக்கு காட்டியிருப்பதும் தெரியவந்தது.

இதுதொடா்பாக, அலுவலக கண்காணிப்பாளா் குமரேசன் அளித்த புகாரின் பேரில், திருவாரூா் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே, முதல்கட்டமாக சிவக்குமாரை பணியிடை நீக்கம் செய்து வனத்துறை அண்மையில் நடவடிக்கை எடுத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.