உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே வீட்டில் வண்ணம் அடித்துக்கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 4:50 am IST

மன்னாா்குடி அருகே வீட்டில் வண்ணம் அடித்துக்கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

புத்தகரம் பகுதியைச் சோ்ந்த ராயப்பன் மகன் ராஜேஷ் (50). பெயிண்டரான இவா், சித்தமல்லியில் உள்ள வீடு ஒன்றில் வா்ணம் அடித்துக் கொண்டிருந்தாா். அப்போது, வீட்டில் இருந்த மின்விளக்கை அவா் சரி செய்தபோது, எதிா்பாராத விதமாக ராஜேஷ் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, பெருகவாழ்ந்தான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். ராஜேஷ் சடலம், உடற்கூறாய்வுக்காக மன்னாா்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.