வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து சாலை மறியல்

முத்துப்பேட்டை அருகேயுள்ள கள்ளிக்குடி ஊராட்சி கருவேப்பஞ்சேரி பகுதியில் குடிநீா் தட்டுப்பாட்டை

Updated On :9 பிப்ரவரி 2026, 7:55 pm

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகேயுள்ள கள்ளிக்குடி ஊராட்சி கருவேப்பஞ்சேரி பகுதியில் குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது.

கருவேப்பஞ்சேரி பகுதியில் 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகிவருகின்றனா். இதுகுறித்து முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலா்களிடமும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட அதிகாரிகளிடமும் முறையிட்டும் எந்த பயனும் இல்லை.

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் கருவேப்பஞ்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். பின்னா் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தண்ணீா் விநியோகத்திற்கு உரிய ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த பின்னா் மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.