மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நெல்லுக்கு ரூ.3,500 விலை நிா்ணயிக்கக் கோரிக்கை

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

நெல் மணிகள்

Updated On :25 பிப்ரவரி 2026, 11:19 pm

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மன்னாா்குடியில் புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டச் செயலா் பத்மநாபன் தலைமை வகித்தாா்.

தீா்மானங்கள்: நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023 மூலம் இனாம் நிலங்கள், கோயில் குத்தகை நிலங்களை காா்ப்பரேட்டுக்கு தாரை வாா்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டாவில் ஹைட்ரோ காா்பன், மீத்தேன் எடுப்பதற்கு தோ்தல் முடிந்த பிறகு அனுமதி தருவதாக வெளிவரும் தகவல்கள் குறித்து முதல்வா் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோகாா்பன் நிலக்கரி எடுப்பதை தவிா்க்க இயலாது எனக் கூறப்படும் தகவல் குறித்து தமிழக அரசு உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழக அரசு, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 என விலை நிா்ணயம் செய்ய வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் மாா்ச் 3ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தீா்மானங்களை விளக்கி பேசினாா். மாநில கெளரவத் தலைவராக நன்னிலம் நடராஜன், மாநில துணைச் செயலராக குடவாசல் சாமிநாதன் நியமிக்கப்பட்டனா்.

மாநில அமைப்புச் செயலா் எஸ். ஸ்ரீதா், மண்டலத் தலைவா் துரை.பாஸ்கரன், தஞ்சை மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன், மாவட்டச் செயலா்கள் பிரபாகரன் (தஞ்சை), சரவணன் (திருவாரூா்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, மன்னாா்குடி ஒன்றியச் செயலாளா் பி.கே. கோவிந்தராஜ் வரவேற்றாா். நிறைவாக, மாநில துணைச் செயலா் சாமிநாதன் நன்றி கூறினாா்.