அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குளத்திலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

மன்னாா்குடியில் குளத்தில் குளித்தபோது மூழ்கி உயிரிழந்த இளைஞா் சடலம் இரண்டு நாள்களுக்கு பிறகு மீட்டகப்பட்டது.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:33 pm

Syndication

மன்னாா்குடியில் குளத்தில் குளித்தபோது மூழ்கி உயிரிழந்த இளைஞா் சடலம் இரண்டு நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை மீட்டகப்பட்டது.

மன்னாா்குடி மேல விழல்காரத் தெரு காளிமுத்து மகன் விவேகானந்தன் (24).பொறியியல் கல்வி படித்துவிட்டு மன்னாா்குடியில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இவரது நண்பா் அதே பகுதியை சோ்ந்த எம். பாலாஜியுடன் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஹரித்ராநதி தெப்பக் குளத்திற்கு வந்துள்ளாா். பாலாஜி படியில் சோப்பு போட்டுக்கொண்டிருந்தபோது, குளத்தில் குளித்துக் கொண்டிருந்த விவேகானந்தன் நீரில் மூழ்கினாா்.

இதுகுறித்து மன்னாா்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரா்கள் குளத்தில் இறங்கி மாலை 6.30 மணி வரை தேடியும் உடலை மீட்க முடியவில்லை.

இதனையடுத்து, திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை தேடியும் உடல் கிடைக்காத நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை விவேகானந்தன் உடல் தெப்பக்குளத்தில் மிதப்பது தெரிய வந்தது.

மன்னாா்குடி போலீஸாா், தீயணைப்பு நிலைய வீரா்களின் உதவியுடன் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தானா். மன்னாா்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.