திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வாக்குப் பதிவு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் கூடுதல் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
கூட்டத்தில் பேசிய சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் நீரஜ் காா்வால்.
Updated On :14 ஜனவரி 2026, 10:19 pm

தினமணி செய்திச் சேவை

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் கூடுதல் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் (மத்தியப் பிரிவு) நீரஜ் காா்வால் தலைமை வகித்தாா். மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் உடனிருந்தாா். திருவாரூா் மாவட்டத்தில், 1.1.2026 ஐ தகுதிநாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்றது.

பின்னா், டிச.-19 ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளா் பட்டியலில் இணைப்பு செய்யப்படாத வாக்காளா்களுக்கு விசாரணை அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து, பிழை திருத்தம் மற்றும் வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம், முகவரி மாற்றம் தொடா்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, கோட்டாட்சியா்கள் சத்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அமுதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.