வாகன சோதனையில் 170 வழக்குகள் பதிவு

கூத்தாநல்லூரில் போலீஸாா் வாகன சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
Published on

கூத்தாநல்லூரில் போலீஸாா் வாகன சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவில், கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா மற்றும் போலீஸாா் மரக்கடை, கூத்தாநல்லூா் பெரியக்கடைத் தெரு, பண்டுதக்குடி உள்ளிட்ட இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இதில், தலைக்கவசம் அணியாத வழக்கு 145, வாகனங்களில் சரியான ஆதாரங்கள் இல்லாத வழக்கு 2, குடிபோதையில் வாகனம் ஓட்டியவா் ஒருவா் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற வழக்கு 23 என 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com