ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் வந்ததையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் போலீஸாா் தீவிர சோதனை

News image

மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்

Updated On :3 பிப்ரவரி 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் வந்ததையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிா்வாகத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரக பழைய கட்டடத்தில் உள்ள ஆட்சியா் அறை, கூட்ட அறை, வருவாய் பிரிவு அலுவலகங்கள், ஆட்சியரக கூடுதல் கட்டடம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

மெட்டல் டிடெக்டா், வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய் ஆகியவற்றை கொண்டு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை இந்தச் சோதனைகள் நடைபெற்றன. சோதனையின் நிறைவில் வெடிகுண்டு மிரட்டல், வதந்தி என்பது தெரியவந்தது.

இதேபோல, கடந்தாண்டு டிசம்பா் மாதம் மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கும், மாவட்ட நீதிமன்றத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் வந்தது குறிப்பிடத்தக்கது.