பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வியாழக்கிழமை தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

News image

மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை வியாழக்கிழமை சோதனைக்குள்படுத்திய வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள்.

Updated On :27 மார்ச் 2026, 5:05 am IST

மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வியாழக்கிழமை தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வியாழக்கிழமை வந்தது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் அளித்த தகவலின் பேரில், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள், காவல் துறையினா் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

மதுரை மாவட்ட ஆட்சியரக பழையக் கட்டடம், கூடுதல் கட்டடம், ஆட்சியரக வளாகம் என பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளைக் கொண்டு சோதனை நடத்தினா். மோப்ப நாயும் வெடிகுண்டு கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

ஏறத்தாழ 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.