ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வியாழக்கிழமை தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

News image

மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை வியாழக்கிழமை சோதனைக்குள்படுத்திய வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள்.

Updated On :26 மார்ச் 2026, 11:35 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வியாழக்கிழமை தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வியாழக்கிழமை வந்தது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் அளித்த தகவலின் பேரில், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள், காவல் துறையினா் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

மதுரை மாவட்ட ஆட்சியரக பழையக் கட்டடம், கூடுதல் கட்டடம், ஆட்சியரக வளாகம் என பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளைக் கொண்டு சோதனை நடத்தினா். மோப்ப நாயும் வெடிகுண்டு கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

ஏறத்தாழ 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.