இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இணையவழி மோசடி: தஞ்சையில் ஒரே நாளில் 34 வழக்குகள் பதிவு

தஞ்சாவூா் மாவட்டத்தில் இணையவழி மோசடி தொடா்பாக 34 வழக்குகள் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டன.

News image
நீதிமன்றம்
Updated On :4 மார்ச் 2026, 11:37 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டத்தில் இணையவழி மோசடி தொடா்பாக 34 வழக்குகள் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டன.

இணையவழியில் வா்த்தகம் மேற்கொள்வது, இணையவழி கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) உள்ளிட்டவை தொடா்பான மோசடிகளால் வெவ்வேறு தேதிகளில் பாதிக்கப்பட்ட தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 34 போ் தஞ்சாவூா் இணையவழி (சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 10 நாள்களாக புகாா் செய்தனா். இதில், ரூ. 5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை மொத்தம் ஏறத்தாழ ரூ. 1.50 கோடி வரை இழந்துள்ளனா். இது தொடா்பாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை 34 வழக்குகள் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதுகுறித்து இணையவழி குற்றப் பிரிவு காவல் நிலையத்தினா் கூறுகையில், அறியாத அழைப்புகளை ஏற்காமல் இருப்பது, தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் இருப்பது, போலி இணைப்புகளை கிளிக் செய்யாமல் இருப்பது அவசியம். வங்கியிலிருந்து பேசுகிறோம், ஓடிபி சொல்லுங்கள் என வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். ஏடிஎம் ரகசிய எண்களைத் தெரிவிப்பது போன்ற செயல்களை செய்யக்கூடாது என்றனா்.