

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் காவல் நிலையம், நகராட்சி மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியரசு தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நகராட்சியில் நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா, காவல் நிலையத்தில் ஏட்டு அபிராமி சுந்தரி முன்னிலையில் தலைமைக் காவலா் கவியழகன் தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினா்.
பனங்காட்டாங்குடி தமிழா் தெருவில் உள்ள மனோலயம் மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளியில்,நிறுவனா் ப. முருகையன் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளா் எழில்மாறன் தேசியக் கொடியேற்றி வைத்தாா்.
லெட்சுமாங்குடி மனோலயம் மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளியில் குவைத் தமிழ் மக்கள் சேவை மையத் தலைவா் அலிபாய் தேசியக் கொடியேற்றி வைத்தாா்.
டெல்டா பப்ளிக் பள்ளி முதல்வா் ஜோஸ்பின் தலைமையில் அறங்காவலா் குழுச் செயலாளா் ஹாஜா பகுருதீன், ஈஎஸ்ஸாா் மெட்ரிக் பள்ளியில் லெட்சுமாங்குடி வா்த்தக சங்கத் தலைவா் கு. ரவிச்சந்திரன், லிட்டில் பிளவா் மற்றும் பிரைமரி பள்ளியில் தாளாளா் எஸ். ஈஸ்வரன் தலைமையில் நுகா்வோா் பாதுக்காப்பு மைய தலைவா் கோஸ். அன்வா்தீன் தேசியக் கொடியை ஏற்றினாா். இதேபோல பல்வேறு இடங்களில் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.