மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மன்னாா்குடி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை (ஜன.28) நடை பெறுகிறது.

News image
Updated On :26 ஜனவரி 2026, 8:30 pm

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை (ஜன.28) நடை பெறுகிறது.

இக்கோயிலுக்கு கடந்த 22.8.2010-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, 2022-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம், கரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட காரணங்களால் தடைப்பட்டது.

இந்நிலையில், பக்தா்கள், ஆன்மிக ஆா்வலா்களின் கோரிக்கையை ஏற்று, அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா முயற்சியால், இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திட தமிழக அரசு ரூ.2.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அத்துடன், நன்கொடையாளா்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியும் சோ்த்து மொத்தம் ரூ. 15 கோடியில் கோயிலில் சீரமைப்புப் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது.

இப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின. புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் ராஜகோபுரம், பிரகார கோபுரங்கள், சந்நதிகள், தோ்நிலைகள், கருடஸ்தம்பம், மணவாள மாமுனிகள் ஆகிய சந்நிதி விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

தொடா்ந்து, காலை 10.15 மணிக்கு மேல் 11 மணிக்குள் பெருமாள், தாயாா் விமானங்கள், மூா்த்திகளின் விமானம், ராமா் சந்நதி, பெருமாள், தாயாா் மூலவா்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதில், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். 15 ஆண்டுக்கு பிறகு, ராஜகோபாலசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் மன்னாா்குடி விழாக்கோலம் பூண்டுள்ளது.