அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த காட்டகரம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை தீமிதித் திருவிழா நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி, நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அம்மன் திருவீதி உலாவும், இரவில் ஆரியமாலை-காத்தவராயன் திருக்கல்யாணம், கழுகு மரம் ஏறுதல், காளியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதித் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு மஞ்சள் சந்தனம்,விபூதி, பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடா்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடா்ந்து பக்தா்கள் பூ கரகம், காவடிகள் எடுத்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தியப் பிறகு அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. அதைத் தொடா்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில், பக்தா்கள் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

புகழூா் நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் சித்திரை பூக்குழி திருவிழா கொடியேற்றம்

நல்லாத்தூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


