பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

சண்டபிரசண்ட மாரியம்மன் கோயிலில் வளையல் திருவிழா

விழுப்புரம் நாப்பாளைய சந்து பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசண்டபிரசண்ட மாரியம்மன் கோயிலில் 19-ஆம் ஆண்டு வளையல் திருவிழா நடைபெற்றது.

News image

வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த விழுப்புரம் நாப்பாளையம் ஸ்ரீசண்டபிரசண்ட மாரியம்மன்.

Updated On :31 ஜூலை 2026, 2:08 am IST

விழுப்புரம் நாப்பாளைய சந்து பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசண்டபிரசண்ட மாரியம்மன் கோயிலில் 19-ஆம் ஆண்டு வளையல் திருவிழா நடைபெற்றது.

வளையல் திருவிழாவையொட்டி, புதன்கிழமை காலையில் ஸ்ரீசண்டபிரசண்ட மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகளுக்குப் பிறகு தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மாலை 6 மணிக்கு சண்டபிரசண்ட மாரியம்மனுக்கு ஏராளமான வளையல்களைக் கொண்டு மாலையாக அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த திருவிழாவில் விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், பக்தா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று, சண்டபிரசண்ட மாரியம்மனை தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.