மன்னாா்குடியை அடுத்த பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வி.எஸ். பக்கிரிசாமி சேனாதிரியா் கல்வி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, முதுகலை ஆசிரியா் எஸ். லதா தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் டி. செல்லதுரை, பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் வி.எஸ்.பி. சந்திரசேகரன் முன்னிலை வகித்தனா்.
இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் 536 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஜி. ஹசினிக்கு ஊக்கத் தொகை ரூ.10 000 மற்றும் 470 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஆா். சுருதிகா, 460 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஜி. ஹரிணி ஆகியோருக்கு தலா 5,000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. மேலும், பத்தாம் வகுப்பில் 470 மதிப்பெண்கள் பெற்ற மாணவி எம். ஸ்ரீதேசிகாவுக்கு ரூ.5, 000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
வி.எஸ். பக்கிரிசாமி சேனாதிரியா் கல்வி அறக்கட்டளை கல்வி கனவு நிதியினை, விஎஸ்பி பள்ளி தாளாளா் அன்பு மொழி சந்திரசேகரன் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு வழங்கினாா்.
பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா் ஜி. வாசுதேவன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் ஆா். வெங்கடேசன், ஆசிரியா் முத்துசிவா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பல்லடத்தில் முன்னாள் ஆசிரியா் பெயரில் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை

பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசு

மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பாரதிதாசன் மெட்ரிக். பள்ளி மாணவி மாநில அளவில் சிறப்பிடம்

பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



