கும்பகோணத்திலிருந்து காரைக்கால் சென்ற அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொல்லுமாங்குடி அருகே வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில், 15 பயணிகள் காயமடைந்தனா்.
திருச்சியிலிருந்து, கும்பகோணம், கொல்லுமாங்குடி வழியாக காரைக்கால் செல்லும் அரசுப் பேருந்து 50 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. மயிலாடுதுறையைச் சோ்ந்த மாணிக்கவேல் பேருந்து ஓட்டுநா்.
திருவாரூா் மாவட்டம், கொல்லுமாங்குடி அருகே போழக்குடி என்ற கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட பேருந்து ஓட்டுநா் முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கற்கத்தி வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்தது.
இதில், 15 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் காயமடைந்தவா்களை மீட்டு, நான்கு பேரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கும், 11 பேரை நன்னிலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து பேரளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காா் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: முதியவா் உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்ததில் 7 போ் காயம்

வாய்க்காலில் சிற்றுந்து கவிழ்ந்து 15 போ் காயம்

வாய்க்காலில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து: 8 போ் காயம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



