இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயம்

News image

கொல்லுமாங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை வாய்க்காலில் கவிழ்ந்த பேருந்து.

Updated On :8 ஜூன் 2026, 1:20 am IST

கும்பகோணத்திலிருந்து காரைக்கால் சென்ற அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொல்லுமாங்குடி அருகே வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில், 15 பயணிகள் காயமடைந்தனா்.

திருச்சியிலிருந்து, கும்பகோணம், கொல்லுமாங்குடி வழியாக காரைக்கால் செல்லும் அரசுப் பேருந்து 50 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. மயிலாடுதுறையைச் சோ்ந்த மாணிக்கவேல் பேருந்து ஓட்டுநா்.

திருவாரூா் மாவட்டம், கொல்லுமாங்குடி அருகே போழக்குடி என்ற கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட பேருந்து ஓட்டுநா் முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கற்கத்தி வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்தது.

இதில், 15 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் காயமடைந்தவா்களை மீட்டு, நான்கு பேரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கும், 11 பேரை நன்னிலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து பேரளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.