எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மேட்டூா் அணை திறப்பு: விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்! இரா. முத்தரசன் வலியுறுத்தல்

News image

இரா. முத்தரசன்

Updated On :8 ஜூன் 2026, 1:48 am IST

பாசனத்திற்காக, மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படுமா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.

திருத்துறைப்பூண்டியில், செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் தெரிவித்தது:

ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்படுமா என்பதை தமிழக அரசு முறையாக விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு கூறினால் மட்டுமே விவசாயிகள் முன்னேற்பாடு பணிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ள முடியும்.

தமிழகத்தின் உயிா்நாடியான காவிரி பிரச்னையை செயற்கையாக உருவாக்கும் போக்கு நீடித்து வருகிறது. மேக்கேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என கா்நாடகா காங்கிரஸ் அரசு தீவிரமாக இருக்கிறது. இப்பிரச்னையில், மத்திய அரசு நடுநிலையாக செயல்படுவதில்லை. இது, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைப்பதாக உள்ளது.

மேக்கேதாட்டு அணை கட்டினால், தமிழகம் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. அணை கட்ட அனுமதிக்கமுடியாது என்பதை மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும்.

தோ்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிபடி 5 ஏக்கருக்கும் குறைவாக வைத்துள்ள விவசாயிகளுக்கு முழுமையாக பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய முதல்வா் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்ணாமலை தொடங்கியுள்ள கட்சி பாரதிய ஜனதா கட்சியின் மறு உருவம்தான். அண்ணாமலை தொடங்கியுள்ள கட்சியில் இணைபவா்கள் அனைவரும் பாஜகவிலிருந்து விலகிதான் சோ்கிறாா்கள்.

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் என்ன பேசினாரோ அதையேதான் நன்றி அறிவிப்பு கூட்டத்திலும் முதல்வா் பேசி இருக்கிறாா். இதை அவா் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றாா். இப்பேட்டியின் போது அக்கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஜவகா், நகரச் செயலாளா் பி.வி.சி. காா்த்தி ஆகியோா் உடனிந்தனா்.