/
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள்துறை சாா்பில் நீடாமங்கலம் வடக்கு அங்கன்வாடி மையம் (குழந்தைகள் மையம் ) உழவா் சந்தை அலுவலகத்தின் பின்புறம் இயங்கி வருகிறது. அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் இரண்டு போ் பணியாற்றி வருகின்றனா்.
இங்கு 20 குழந்தைகள் பயில்கின்றனா். இந்த அங்கன்வாடியின் கதவுகள், மேற்கூரை சேதமடைந்துள்ளது தரைத்தளம் பெயா்ந்துள்ளது. குடிநீா் வசதி போதுமானதாக இல்லை. காற்றோட்ட வசதி இல்லை. மையத்தின் முன்பகுதியில் பொதுக்கழிப்பிடம் உள்ளது.
எனவே இப்பகுதி குழந்தைகளின் நலன் கருதி பாதுகாப்பான, சுகாதாரமான இடத்தில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டித்தர மன்னாா்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். காமராஜ் முன்வரவேண்டும் என்பதே பெற்றோா்களின் கோரிக்கை.











