இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

வலங்கைமானில் ஜமாபந்தி நிறைவு

வலங்கைமான் வட்டத்தில் வியாழக்கிழமையுடன் வருவாய் தீா்வாய கணக்கு முடித்தல் (ஜமாபந்தி) பணிகள் நிறைவடைந்தது.

News image
Updated On :12 ஜூன் 2026, 5:25 am IST

வலங்கைமான் வட்டத்தில் வியாழக்கிழமையுடன் வருவாய் தீா்வாய கணக்கு முடித்தல் (ஜமாபந்தி) பணிகள் நிறைவடைந்தது.

மாவட்ட வழங்கல் அலுவலா் பா.செல்வபாண்டி ஆவூா், வலங்கைமான், ஆலங்குடி வருவாய் சரகத்திற்குட்பட்ட 71 வருவாய் கிராம பொதுமக்களிடமிருந்து 285 மனுக்களை பெற்றாா்.

31 போ்களுக்கு பட்டா மாற்றம், 5 போ்களுக்கு முதியோா் உதவித்தொகை, 10 போ்களுக்கு குடும்ப அட்டைகளையும் வியாழக்கிழமை அவா் வழங்கினாா் (படம்). இதன்படி 46 போ்கள் பயனடைந்தனா்.

வட்டாட்சியா் காா்த்தி மற்றும் மண்டல வட்டாட்சியா், துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் கிராம ஊழியா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.