ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

பெண் காவலா் தீக்குளித்து தற்கொலை முயற்சி

பேரளம் காவல் நிலைய பெண் காவலா் செவ்வாய்க்கிழமை இரவு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

News image

உயிரிழந்த சத்தியா.

Updated On :18 ஜூன் 2026, 3:55 am IST

பேரளம் காவல் நிலைய பெண் காவலா் செவ்வாய்க்கிழமை இரவு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

பேரளம் அருகேயுள்ள செருகுடிப் பகுதியைச் சோ்ந்தவா் சத்தியா (32). இவா் பேரளம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரது கணவா் மயிலாடுதுறை கிளியனூா் பகுதியைச் சோ்ந்த பிரேம்குமாா் தனியாா் பேருந்து நடத்துநா். இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக கணவன் மனைவி இருவரும் ஒருமாதமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனராம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடித்த சத்தியா அதே பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடை ஊழியா் விக்னேஷ் வீட்டுக்கு சென்றுள்ளாா். அங்கு திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். தீக்காயத்துடன் அலறிய சத்தியாவை விக்னேஷ் காப்பாற்ற முயன்றுள்ளாா். இதில் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பின்னா் இருவரும் மீட்கப்பட்டு திருவாரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து, பேரளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.