தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியவருக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை

பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியவருக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

News image

சிறை

Updated On :4 மார்ச் 2026, 11:49 pm

பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியவருக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

திருவாரூா் பவித்திரமாணிக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் (29). திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் 2-ஆம் நிலை காவலராக பணியாற்றி வருகிறாா். இதனிடையே 2021 கரோனா காலத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு பணியிலிருந்தபோது, அங்கு பணியாற்றிய பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பழகியவா், பின்னா் திருமணம் செய்ய மறுத்து விட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவாரூா் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், சதீஷூக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.22,000 அபராதமும் விதித்து நீதிபதி சரத்ராஜ் தீா்ப்பு வழங்கினாா். அரசு சாா்பில் ரூ.3 லட்சம் நிவாரணம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.