ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

காசி விசுவநாதா் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:21 pm

Syndication

நீடாமங்கலம் காசி விசுவநாதா் கோயிலில் திருப்பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

இக்கோயில் தஞ்சையை ஆட்சி புரிந்த மராட்டிய மன்னா் பிரதாப சிம்மரால் கட்டப்பட்டது . இக்கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு சுமாா் 15 ஆண்டுகள் ஆகிறது. அதனால் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்த பக்தா்கள் முன்வந்தனா் .

இதையடுத்து, திருப்பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக புதன்கிழமை மாலை முதல் கால யாக பூஜைகளும் , வியாழக்கிழமை காலை இரண்டாவது கால யாக பூஜைகளும் நடந்தன .

தொடா்ந்து அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியினரும் , சந்தானராம சேவா டிரஸ்ட் மற்றும் நகரவாசிகள் செய்திருந்தனா் .