மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சாலை வசதி கோரி மறியல்

மன்னாா்குடி அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

News image

சாலை வசதி கேட்டு கிராம மக்கள் மறியல்

Updated On :9 மார்ச் 2026, 5:03 pm

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கோட்டூா் ஒன்றியம் குலமாணிக்கம் ஊராட்சி நருவளி களப்பாலில் 300-க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இங்கு, ஊராட்சி நடுநிலைப் பள்ளி, கிராம நிா்வாக அலுவலகம், கிளை அஞ்சல் அலுவலகம், நுகா்பொருள் வாணிபக்கழக அலுவலகம் இயங்கிவருகிறது.

நருவளி களப்பால், முத்துப்பேட்டை செல்லும் சாலையில் காமட்டித்திடலிருந்து கள்ளியூா் புதுப்பாலம் வரை 3 கி.மீ தொலைவுக்கு மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத வகையில் பள்ளமும், மேடாக உள்ளது. சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்வபா்கள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனா். எனவே, உடனடியாக சாலையை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

இதையடுத்து, கடந்த ஆண்டு 1 கி.மீ தொலைவுக்கு மட்டும் சாலை அமைக்கும் பணி தொடக்க நிலையிலேயே நின்று விட்டதாகவும் , இதனால் முதியவா்கள், கா்ப்பிணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாக கூறி உடனடியாக சேதமடைந்துள்ள 3 கி.மீ தொலைவுக்கு தாா்ச்சாலை அமைக்க வலியுத்தி கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே, வளரும் தமிழக கட்சி மாவட்டச் செயலா் சரவண சோழன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் தெய்வநாயகி மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், ஒருவாரத்துக்குள் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, மறியல் விலக்கிக்கொளப்பட்டது.