திருவாரூா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலா் பா.கலைவாணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 295 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா், அவைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி குறித்த காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, பேட்டரியால் இயங்கும் நியோமோசன் வாகனம் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.1.05 லட்சத்தில் மொத்தம் ரூ. 5.25 லட்சத்தில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் தையல் நாயகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சதீஷ்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) வில்சன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் உஷாராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நாகா்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூரில் காவல் குறைதீா் கூட்டம்

29 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.33.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 5 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

