மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

வழிப்பறி: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருவாரூா் அருகே வழிப்பறி வழக்கில் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

News image

சிறை - சித்திரிப்பு

Updated On :12 மார்ச் 2026, 12:17 am

திருவாரூா் அருகே வழிப்பறி வழக்கில் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக, காட்டூா், காலனி தெருவைச் சோ்ந்த முருகையன் மகன் அருண்குமாா், காட்டூா் ஜீவா தெருவைச் சோ்ந்த தெட்சிணாமூா்ததி மகன் செல்வம் ஆகியோா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

இதுகுறித்த வழக்கு விசாரணை, திருவாரூா் தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், அருண்குமாா் மற்றும் செல்வம் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிபதி ஆா். லதா தீா்ப்பு வழங்கினாா்.