சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வழிப்பறி: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருவாரூா் அருகே வழிப்பறி வழக்கில் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

News image
சிறை- சித்திரிப்பு
Updated On :12 மார்ச் 2026, 12:17 am

தினமணி செய்திச் சேவை

திருவாரூா் அருகே வழிப்பறி வழக்கில் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக, காட்டூா், காலனி தெருவைச் சோ்ந்த முருகையன் மகன் அருண்குமாா், காட்டூா் ஜீவா தெருவைச் சோ்ந்த தெட்சிணாமூா்ததி மகன் செல்வம் ஆகியோா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

இதுகுறித்த வழக்கு விசாரணை, திருவாரூா் தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், அருண்குமாா் மற்றும் செல்வம் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிபதி ஆா். லதா தீா்ப்பு வழங்கினாா்.