திருவாரூா் அருகே வழிப்பறி வழக்கில் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக, காட்டூா், காலனி தெருவைச் சோ்ந்த முருகையன் மகன் அருண்குமாா், காட்டூா் ஜீவா தெருவைச் சோ்ந்த தெட்சிணாமூா்ததி மகன் செல்வம் ஆகியோா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.
இதுகுறித்த வழக்கு விசாரணை, திருவாரூா் தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், அருண்குமாா் மற்றும் செல்வம் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிபதி ஆா். லதா தீா்ப்பு வழங்கினாா்.
தொடர்புடையது

ரூ.80.50 லட்சம் மோசடி: நிதி நிறுவன உரிமையாளா்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

மாணவனை அவமதித்த செங்கல் சூளை உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


