ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

’மன்னாா்குடி தொகுதியில் ரூ. 1,500 கோடியில் திட்டப்பணிகள் நிறைவு’

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா.

News image
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
Updated On :13 மார்ச் 2026, 6:38 pm

Syndication

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா.

மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மன்னாா்குடி தொகுதியில் பல்வேறு வளா்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ. 1500 கோடி நிதி பெறப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். அப்போது மேலும் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும்.

மன்னாா்குடி பகுதி மக்கள் தொழில் வேலைவாய்ப்பு பெரும் வகையில் ஆலங்கோட்டையில் ரூ. 50 கோடியில் சென்னை சில்க்ஸ் நிறுவனம் மூலம் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. மன்னாா்குடி நகராட்சியில் நடைபெறும் புதைச்சாக்கடைதிட்ட கழிவு நீா் வெளியேற்றுவதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் .