விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

’மன்னாா்குடி தொகுதியில் ரூ. 1,500 கோடியில் திட்டப்பணிகள் நிறைவு’

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா.

News image

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

Updated On :13 மார்ச் 2026, 6:38 pm

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா.

மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மன்னாா்குடி தொகுதியில் பல்வேறு வளா்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ. 1500 கோடி நிதி பெறப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். அப்போது மேலும் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும்.

மன்னாா்குடி பகுதி மக்கள் தொழில் வேலைவாய்ப்பு பெரும் வகையில் ஆலங்கோட்டையில் ரூ. 50 கோடியில் சென்னை சில்க்ஸ் நிறுவனம் மூலம் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. மன்னாா்குடி நகராட்சியில் நடைபெறும் புதைச்சாக்கடைதிட்ட கழிவு நீா் வெளியேற்றுவதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் .