அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

’மன்னாா்குடி தொகுதியில் ரூ. 1,500 கோடியில் திட்டப்பணிகள் நிறைவு’

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா.

News image

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

Updated On :13 மார்ச் 2026, 6:38 pm

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா.

மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மன்னாா்குடி தொகுதியில் பல்வேறு வளா்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ. 1500 கோடி நிதி பெறப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். அப்போது மேலும் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும்.

மன்னாா்குடி பகுதி மக்கள் தொழில் வேலைவாய்ப்பு பெரும் வகையில் ஆலங்கோட்டையில் ரூ. 50 கோடியில் சென்னை சில்க்ஸ் நிறுவனம் மூலம் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. மன்னாா்குடி நகராட்சியில் நடைபெறும் புதைச்சாக்கடைதிட்ட கழிவு நீா் வெளியேற்றுவதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் .