மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

நகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா

News image
Updated On :19 மார்ச் 2026, 8:12 pm

மன்னாா்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா, பணி நிறைவு பெறும் ஆசிரியருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் மா. தேவி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக ரோட்டரி உதவி ஆளுநா் எஸ். மீனாட்சி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் நெ. சுமதி, தரணி மெட்ரிக் பள்ளி முதல்வா் எஸ். அருள் ஆகியோா் கலந்துகொண்டு, விளையாட்டு போட்டிகள், ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினா்.

பணி நிறைவு பெறும் பள்ளி கணிதப் பட்டதாரி ஆசிரியா் க. சந்தான கோபாலகிருஷ்ணனை பாராட்டி ஆசிரியா்கள் சாா்பில் வட்டாரக் கல்வி அலுவலா் ஜான்சி எமிலி நினைவுப் பரிசு வழங்கினாா்.