ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

தெரு நாய்களை பிடிக்க வலியுறுத்தி சாலை மறியல்!

மன்னாா்குடி அருகே தெருநாய்களை பிடிக்க வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :23 மார்ச் 2026, 1:49 am IST

மன்னாா்குடி அருகே தெருநாய்களை பிடிக்க வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

வேங்கைபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். அனைவரும் விவசாயம் சாா்ந்த தொழிலில் ஈடுபட்டு வருவதுடன், மாடு, ஆடு மற்றும் கோழிகள் வளா்த்து வருகின்றனா்.

இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் கடித்ததில், பாரதி என்பவரின் 2 ஆடுகள், சோபியா, ராஜேஸ்வரி ஆகியோரது தலா 1 ஆடு என 4 ஆடுகள் உயிரிழந்தன.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியினா் இறந்த ஆடுகளுடன், வேங்கைபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அங்குவந்த மன்னாா்குடி போலீஸாா், பேச்சுவாா்த்தை நடத்தி, இப்பிரச்னை குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், மன்னாா்குடி-திருவாரூா் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.