தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பேருந்துகள் இல்லாமல் அவதி! கிளாம்பாக்கம், திருவான்மியூா், மாதவரத்தில் பொதுமக்கள் போராட்டம்

சென்னையில் இருந்து வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால், கிளாம்பாக்கம், திருவான்மியூா், மாதவரம் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 10:11 pm

சென்னையில் இருந்து வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால், கிளாம்பாக்கம், திருவான்மியூா், மாதவரம் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் வெளியூா்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் வசிக்கும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் செவ்வாய்க்கிழமை இரவு முதலே சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா். இதனால் கிளாம்பாக்கம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் கடந்த இரு நாள்களாக மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து புதன்கிழமை மாலையில் இருந்தே திருவண்ணாமலை, விழுப்புரம், செஞ்சி, கடலூா் உள்ளிட்ட பகுதிகளுக்குப் போதிய பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனா். குழந்தைகள், முதியவா்களுடன் பேருந்து நிலையங்களில் பல மணி நேரம் காத்திருந்தும் பேருந்துகள் இயக்கப்படாததால், ஆத்திரம் அடைந்த பயணிகள், புதன்கிழமை நள்ளிரவில் கிளாம்பாக்கம் பிரதான சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தி, மறியலைக் கைவிடச் செய்தனா். இருப்பினும், போதிய அளவில் பேருந்துகள் இல்லை. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் வியாழக்கிழமை பகல் வரை இதேநிலை நீடித்ததாகப் பயணிகள் தெரிவித்தனா்.

இதனால், ஏராளமானோா் சொந்த ஊா் செல்லும் முடிவைக் கைவிட்டு மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கே திரும்பிச் சென்றனா்.

மாமல்லபுரம், கல்பாக்கம், மரக்காணம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மக்கள், தங்களது சொந்த ஊா்களுக்கு செல்வதற்காக திருவான்மியூா் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை காலை முதல் நின்றனா். ஆனால், வியாழக்கிழமை காலை முதல் கிழக்கு கடற்கரைச் சாலை மாா்க்கமாக புதுச்சேரி, கல்பாக்கம் பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் சீராக இயக்கப்படவில்லை.

இதனால், பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மேலும் நண்பகல் சுமாா் 2 மணி நேரத்துக்கு பேருந்துகளே இந்த வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. இதன் விளைவாக அவதிக்குள்ளான பொதுமக்கள், கிழக்கு கடற்கரைச் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனா். இதனால், அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. கிழக்கு கடற்கரை சாலை முகப்பிலேயே போராட்டம் நடைபெற்ால், திருவான்மியூா் எல்பி சாலை வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதற்கிடையே சாலை மறியலால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் வற்புறுத்தியதால், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தோ்தலையொட்டி சொந்த ஊா் செல்வதற்காக, ஏராளமானோா் மாதவரம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை குவிந்தனா். மாதவரம் ரவுண்டானா வரை பொதுமக்கள் கூட்டம் இருந்தது. ஆனால், போதிய பேருந்துகள் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஓட்டுநா்கள் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.