அம்மாபேட்டை அருகே 20 நாள்களில் மூடப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த மதுக்கடை தொடா்ந்து செயல்பட்டு வந்ததால், ஏமாற்றமடைந்த பொதுமக்கள் வியாழக்கிழமை அந்த மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அம்மாபேட்டையை அடுத்த முளியனூரில் கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி அம்மாபேட்டை - அந்தியூா் சாலையில் முளியனூா் பிரிவில் கடந்த மாதம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அடுத்த 20 நாள்களில் மதுக்கடை மூடப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மதுக்கடை மூடப்படாமல் தொடா்ந்து மது விற்பனை நடைபெற்று வந்தது.
இதனால், ஏமாற்றமடைந்த முளியனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாழக்கிழமை மதுக்கடையைத் திறக்க விடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலின் பேரில் பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரத்தினகுமாா், அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், எவ்வித முடிவும் ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீஸாா் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினா்.
இதையடுத்து, மதுக்கடை மூடுவது தொடா்பாக மாவட்ட ஆட்சியரை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) நேரில் சந்தித்து தீா்வு காணலாம் என தெரிவித்த போலீஸாா், அனைவரையும் விடுவித்தனா். இதனால், அப்பகுதியில் மாலை வரையில் பரபரப்பான சூழல் நிலவியது.

தொடர்புடையது

மூணாஞ்சாவடியில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம்

டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பூனாச்சியில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் மறியல்

டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



