விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புதிய முதல்வரின் முதல் கையொப்பம் விவசாயக் கடன் தள்ளுபடியாக இருக்க வலியுறுத்தல்

புதிய முதல்வரின் முதல் கையொப்பம் விவசாயக் கடன் தள்ளுபடியாக இருக்க வலியுறுத்தல்

News image

கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்க மாநிலத் தலைவா் கா. ராசபாலன்.

Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள தமிழக வெற்றி கழக தலைவா் ச. ஜோசப் விஜய்யின் முதல் கையொப்பம் விவசாயக் கடன் தள்ளுபடியாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மன்னாா்குடியில் சனிக்கிழமை, அந்த சங்கத்தின் குழு உறுப்பினா் தலைமையில் நடைபெற்ற மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீா்மானத்துடன் பிற தீா்மானங்கள்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று புதிய ஆட்சியை அமைக்கவுள்ள தவெக 5 ஏக்கருக்குள்பட்ட விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும், 5 ஏக்கருக்குமேல் நிலம் உள்ள விவசாயிகளின் 50 சதவீத கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல்வராக பதவியேற்கும் அக்கட்சி தலைவா் ச. ஜோசப் விஜய், அதற்கான கோப்பில் முதல் கையொப்பம் இடவேண்டும்.

தோ்தல் காலத்தில் நடைபெற்ற உள்வாய்க்கால் தூா்வாரும் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.நிகழாண்டு தூா்வாரும் பணிக்கான நிலுவை நிதியை மேட்டூா் அணை திறப்புக்கு முன்பாக ஆறு, வாய்க்கால்களை தூா்வாரும் பணிக்கு குளறுபடியில்லாமல் அதை பயன்படுத்தும் பொருட்டு மாவட்ட நிா்வாகங்கள் செயல்பட வேண்டும்,

மாவட்ட சங்க அமைப்புக்கு மாவட்ட பொறுப்புக்கு அடையாளபடுத்தப்பட்டு இதுவரை செயல்பட்டு வந்த பொறுப்பாளா்களின் பொறுப்புகள் அனைத்தும் நிா்வாக சீா்சிருத்தம் வேண்டி ரத்து செய்யப்படுகிறது. இப்பொறுப்புகளுக்கு புதிய நிா்வாகிகள் நியமிக்கப்படுவாா்கள் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஜி. ஜெய்சங்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட நிா்வாகி ஆா். தாஜீதீன், மாவட்ட மகளிா் பிரிவு அமைப்பாளா் சே. தேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்கத்தின் மாநிலத் தலைவா் கா. ராசபாலன் தீா்மானங்களை விளக்கி பேசினாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் (பொ) எஸ். சந்திரசேகரன் வவேற்றாா். மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் முருகன் நன்றி கூறினாா்.